விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா |
இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து 'பா', 'சீனிகம்' என வித்தியாசமான படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் இயக்குனர் பால்கி. அதன்பிறகு அமிதாப் பச்சனையும் தனுஷையும் இணைத்து இந்தியில் 'ஷமிதாப்' என்கிற படத்தை இயக்கினார் பால்கி. மேலும் அக்சய் குமாரை வைத்து 'பேடு மேன்' என்கிற படத்தை இயக்கிய பால்கி, கடைசியாக மிஷன் மங்கள் படத்திற்கு கதையும் எழுதியிருந்தார்.
இந்தநிலையில் அவர் அடுத்தததாக இயக்கவுள்ள படத்தில் கதாநாயகனாக துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை பால்கி இயக்கிய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, இருக்கை நுனியில் அமரவைக்கும் த்ரில்லர் படமாக இது உருவாக இருக்கிறதாம். இதற்கான கதையையே இந்த ஊரடங்கு காலத்தில் தான் எழுதினாராம் பால்கி. ஏற்கனவே கார்வான், தி சோயா பேக்டர் என இரண்டு இந்திப்படங்களில் நடித்துள்ள துல்கர் சல்மானுக்கு இந்தியில் இது மூன்றாவது படமாகும்.