சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
டைரக்டர் பிரியதர்ஷன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளாராம். இப்படத்திற்கு தற்காலிகமாக பச்சன் சிங் என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படம் பற்றிய தகவலை உறுதி செய்த பிரியதர்ஷன் கூறுகையில், இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இப்படத்தின் சூட்டிங்கை துவக்க உள்ளோம். இப்படத்தில் அபிஷேக் பச்சன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றார். பச்சன் சிங் படத்திற்கு ரம்மி ஜாப்பர் திரைக்கதை எழுத, பிரியதர்ஷன் இயக்குகிறார். இப்படத்தை ராஜத் ரவாலி தயாரிக்கிறார்.
இப்படத்தில் அபூர்வசக்தி கொண்ட , லஞ்சம் வாங்கும் போலீஸ் அதிகாரியாக அபிஷேக் பச்சன் நடிக்கிறாராம். படத்தின் படப்பிடிப்புக்களை துவக்குவதற்காக ஏற்பாடுகள் மம்முரமாக நடந்து வருகிறதாம்.