விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
ஹிந்தி நடிகர் அக்சய் குமார், போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக அரசின் உதவியுடன் இணையதளம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் நிதி வசூலித்து, ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி வருகிறார்.
இதனை பயன்படுத்தி மோசடி கும்பல் ஒன்றை, அக்சய் குமாரின் இணையதளத்தை போன்றே போலி இணையதளம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதில் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நன்கொடை அளிக்கும்படி, நடிகரின் பெயரிலேயே போலி வங்கி கணக்கு ஒன்றையும் இணைத்துள்ளனர். இது இணையதளங்களில் வைரலாக பரவி, பலரும் பணம் அனுப்ப துவங்கி உள்ளனர்.
அக்சய் குமார் தனது இணையதளம் மூலம் வசூலித்த ரூ.1.09 கோடி நிதியை 11 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்திற்கு கடந்த ஏப்ரலில் நன்கொடையாக அளித்துள்ளார். இதற்காக நடந்த விழாவில் அக்சய் குமார், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அந்த தொகையை அளித்துள்ளார்.
தனது பெயரில் பரவி வரும் போலி இணையதளத்தை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள அக்சய் குமார், மறைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்காக தான் செய்த வரும் இந்த பணியை தவறாக பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.