சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
யூரி தாக்குதலுக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் உறவில் சுமூகமான உறவு இல்லை. இருநாடுகளுக்கு இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இது இந்திய சினிமாவிலும் எதிரொலிக்கிறது. குறிப்பாக பாலிவுட் சினிமாவில் பாகிஸ்தான் கலைஞர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாலிவுட் மட்டுமல்ல இந்தியாவிலேயே பாக்., நடிகர்கள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாக்., நடிகர்கள் பணியாற்றிய படங்களுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், அஜய் தேவ்கன் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் உள்ள ‛சிவாய்' படத்தில் பாகிஸ்தானை சேர்ந்த சபா ஓமர் எனும் நடிகை பணியாற்றியிருப்பதாக செய்தி பரவியுள்ளது. ஆனால் இதை சிவாய் படக்குழு மறுத்துள்ளது. இதுப்பற்றி அந்த படக்குழு வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛சிவாய் படத்தில் எந்த பாகிஸ்தான் நடிகையும் இல்லை, சில வேண்டுமென்றே இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்'' என்று கூறப்பட்டுள்ளது.