விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷ்ய் குமார், ரஜினியின் எந்திரன்-2 தவிர, பாலிவுட்டில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் ரசிகர் ஒருவர் அக்ஷ்ய் குமாருடன் செல்பி எடுக்க முயன்றார், அப்போது அக்ஷ்ய்குமாரின் பாதுகாவலர், அந்த ரசிகரை தாக்கினார். இந்தசம்பவம் வைரலாக பரவ, அக்ஷ்ய் குமாருக்கு எதிராக கண்டனங்களும் எழுந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியிருக்கிறார் அக்ஷ்ய் குமார்.
இதுகுறித்து அக்ஷ்ய் குமார் கூறியுள்ளதாவது... ''அன்றைக்கு விமானநிலையத்தில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. நான் திரும்பி பார்த்தபோது தவறு ஏதுவும் நடைபெறவில்லை. பின்னர் மீடியாக்களில் பார்த்த போது தான் தெரிந்து கொண்டேன், என்னுடைய பாதுகாவலர், ரசிகரை தாக்கியிருக்கிறார். இதையடுத்து எனது பாதுகாவலரை கூப்பிட்டு கண்டித்தேன், எச்சரிக்கையும் செய்துள்ளேன். இந்த சம்பவத்திற்காக நான் மிகவும் வருந்துகிறேன். சம்பந்தப்பட்ட ரசிகரிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இதுபோன்று எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்து கொள்வேன். ரசிகர்கள் தான் என்னுடைய பலமே என்று கூறியுள்ளார்.