'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் |
ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் 'ரத்த சரித்ரா' என்ற திரைப்படம் இரண்டு பாகங்களாக 2010ம் ஆண்டு வெளிவந்தது. சூர்யா, விவேக் ஓபராய், சுதீப் மற்றும் பலர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர். தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இரண்டு பாகங்களாகவும் தமிழில் ஒரு பாகமாக 'ரத்த சரித்திரம்' என்றும் வெளியாகின. ஆந்திராவில் நடைபெற்ற சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அந்தப் படங்கள் உருவாக்கப்பட்டன. விமர்சன ரீதியாக பெரிதும் பாராட்டப்பட்ட படங்களாக அவை அமைந்தன.
அந்தப் படங்களின் தொடர்ச்சியாக ராம்கோபால் வர்மா 'ஸ்பாட்' என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் ஹைதராபாத்தில் சுமார் 18 வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஓபுல் ரெட்டி என்பவரின் கொலையைப் பற்றியும், அந்தக் கொலை நடைபெற்றதன் பின்னணிக் காரணங்களையும் பற்றி படமாக எடுக்க உள்ளார்.
'ரத்த சரித்திரம்' படத்திலும் எண்ணற்ற கிளைக் கதாபாத்திரங்கள் இருந்தன. அந்தப் படத்தில் நான் நினைத்த அளவிற்கு பத்து சதவீதத்தைக் கூட நான் படமாக்கவில்லை. அந்தப் பட உருவாக்கத்தின் போது பல விஷயங்களைக் கேட்டு அறிந்தேன். அதன் தொடர்ச்சியாகத்தான் பல விஷயங்களை அறிந்து கொண்டதன் அடிப்படையில் 'ஸ்பாட்' படத்தை இயக்க உள்ளேன் என இந்தப் படத்தின் அறிமுக விழாவிலேயே தெரிவித்திருந்தார்.