புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து தயாராகும் புதுப்படத்தில் பாஞ்சாலி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். ராஜ்நீதி படப்பிடிப்பின் போது இயக்குனர் பிரகாஷ் ஜாவும், நானா படேகரும் மோதிக் கொண்டனர் என்று கூறப்பட்டது. ஆனால் அவர்களோ தாங்கள் இருவரும் எப்போதும் போல பரஸ்பரம் மரியாதையுடன் பழகி வருவதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் பிரகாஷ் ஜா தயாரிப்பில் நானா படேகர் படம் ஒன்றை இயக்குகிறார். மகாபாரதத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் இந்த படத்துக்கு பாஞ்ச் பாண்டவ் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் அர்ச்சுனன் வேடத்தில் அஜய் தேவ்கான் நடிக்கிறார். யுதிஷ்டிரன் வேடத்தில் இர்பான் கான், சகுனி கதாபாத்திரத்தில் ஓம்புரி, நகுலனாக ரேஹான் கான் நடிக்கின்றனர். மகாபாரதத்தின் மிக முக்கிய கதாபாத்திரமாக கருதப்படும் பாஞ்சாலி வேடத்தில் நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். பீமன், மற்றும் சகாதேவன் வேடத்தில் நடிக்க பிரகாஷ் ஜா டீம், நடிகர்களை தேடிவருகிறது. இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு துவங்குகிறது.