தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது |

ஹிந்தியில் 'சேக்ரட் கேம்ஸ்' வெப் தொடரில் நடித்த நடிகர் ஜதின் சர்னா, அடுத்ததாக 'நா ஜானே கவுன் ஆ கயா' எனும் படத்தில் நடித்துள்ளார். மார்ச் 6ல் ரிலீசாகும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஜதின் சர்னா பங்கேற்று வருகிறார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: இந்த படம் என்னை வேறொரு கோணத்தில் காட்டுவதால் பதட்டத்தை விட உற்சாகமாக இருக்கிறேன். ரசிகர்கள் இப்படத்தில் என்னை ஒரு காதல் கதையில் பார்ப்பார்கள்.
இப்படத்தில் எனது கதாபாத்திரம் உணர்ச்சிவசமானது, நேர்மையானது மற்றும் அவரது உணர்வுகளுடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது. காதல் படத்தில் நடிப்பது சவாலாக இருந்தது. சில நேரங்களில் டயலாக் பேசுவதை விட, பார்ப்பது கூட அதிக உணர்வுகளை வெளிப்படுத்தும். உடல் மொழி மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த நிறைய கஷ்டப்பட்டேன். காதல் நாடகத்தனமாக இல்லாமல், இயல்பாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன்.
இப்படம் காதலை நம்புவது பற்றியும் விதியை நம்புவது பற்றியும் சொல்கிறது. சில நேரங்களில் காதல் எதிர்பாராத நேரங்களில் உங்கள் வாழ்க்கையில் வருகிறது. அதுவே தலைப்பில் குறிப்பிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.




