பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

சினிமா பிரபலங்களில் நடிகர் ரஜினிகாந்த்தை தொடர்ந்து சமீபத்தில் மலையாள நடிகர் மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு திரையுலகில் இருந்தும் ரசிகர்களிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தற்போது அவர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திரிஷ்யம் 3 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பில் கலந்து கொள்ள வருகை தந்த மோகன்லாலுக்கு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். திரிஷ்யம் 3 படத்தின் கதாநாயகியான மீனா மோகன்லாலுக்கு சால்வை அணிவித்து தனது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.