பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

சமீபத்தில் 71வது தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விழாவில் மோகன்லால் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசும்போது, மோகன்லால் நடித்த வானப்பிரஸ்தம் மற்றும் கர்ணாபரம் ஆகிய இரண்டு படங்களில் அவரது நடிப்பு குறித்து பாராட்டி பேசினார். கேரளா வந்த மோகன்லாலிடம் செய்தியாளர்கள் இந்த இரண்டு படங்களை ஜனாதிபதி குறிப்பிட்டு பேசியது எதனால் என கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த மோகன்லால், “இந்த இரண்டு படங்களுமே கிளாசிக்கல் கலையை அடிப்படையாகக் கொண்டவை. அதில் ஒன்று சமஸ்கிருத ட்ராமா. இன்னொன்று முப்பரிமாண கலை வடிவத்தைக் கொண்டது. பெரும்பாலானோர் இதை திரைப்படங்களில் பயன்படுத்துவதில்லை. அதான்ல இந்த இரண்டு படங்களையும் அவர் குறிப்பிட்டு பேசியிருக்கலாம்” என்றார்.