2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான ரன்பீர் கபூர், ஆலியா பட் ஆகியோருக்கு ராஹா என்ற மகள் இருக்கிறாள். இந்த நிலையில் தற்போது அவர்கள் மும்பையில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் ஆறு மாடியில் சொகுசு பங்களா ஒன்றை ராஹா என்ற பெயரில் கட்டி உள்ளார்கள். 250 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பங்களாவில் விரைவில் ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் குடியேற போகிறார்கள்.
ஆனால் கட்டி முடிக்கப்பட்டுள்ள அந்த சொகுசு பங்களாவை யாரோ வீடியோ எடுத்து அதை இணையத்தில் வைரலாக்கி உள்ளார்கள். இதனால் கடும் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார் ஆலியா பட். இதை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛மும்பையில் இடவசதி குறைவாக இருப்பதால் ஒரு வீட்டின் ஜன்னல் இன்னொரு வீட்டை பார்த்தபடி தான் வீடு கட்ட முடியும். அதற்காக இதை வீடியோ எடுத்து வைரலாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் இந்த வீடியோவை பதிவிட்டவர்கள் உடனே நீக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார் ஆலியா பட்.