விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! | ‛சூர்யா 45' படத்தின் தலைப்பு இதுவா? | செப்டம்பரில் ‛வா வாத்தியார்' படத்தை வெளியிட திட்டம்! | ஹீரோவாக நடிக்கும் படத்திற்காக தற்காப்பு கலை பயிற்சி பெறும் லோகேஷ் கனகராஜ்! | தெலுங்கானா மாநில சினிமா விருதுகள்: நேரில் விருது பெற்ற அல்லு அர்ஜுன் | அப்பாவை அப்படி பார்த்தது மகிழ்ச்சி: கீர்த்திபாண்டியன் நெகிழ்ச்சி | கவிஞர்.நா.முத்துக்குமார் இசைச்கச்சேரி: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு | மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி? | விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் | தயாராகிறார் அடுத்த கேப்டன் |
பாலிவுட்டில் 90களில் முன்னணி நடிகயைக இருந்தவர் கரிஷ்மா கபூர். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளரான ரந்தீர் கபூரின் மகள். அவருடைய முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் நேற்று இரவு லண்டனில் திடீர் மாரடைப்பால் காலமானார். விஷயம் அறிந்ததும் கரிஷ்மாவின் தங்கை கரீனா, இவரது கணவர் சைப் அலிகான், நடிகை மலாய்க்கா அரோரா ஆகியோர் மும்பையில் உள்ள கரிஷ்மாவின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
கரிஷ்மா, சஞ்சய் இருவரும் 2003ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2016ம் ஆண்டு விவகாரத்து பெற்றனர். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். சஞ்சய் கபூர் சிக்ஸ்ட் இந்தியா என்ற நிறுவனத்தின் சிஇஓ-வாக இருக்கிறார்.
விவாகரத்து பெறுவதற்கு முன்பாக சஞ்சய் மற்றும் அவரது அம்மா தன்னைக் கொடுமைப்படுத்தியதாகவும், வரதட்சணை கொடுமை என அவர்கள் மீது வழக்கு தொடுத்திருந்தார் கரிஷ்மா.
விவாகரத்து பெற்ற பின் பிரிய சச்தேவ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் சஞ்சய். நேற்று அகமதாபாத் விமான விபத்து பற்றி கூட இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். போலோ விளையாடிய போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என செய்தி வெளியாகி உள்ளது.
தன் முன்னாள் கணவர் மறைவு குறித்து கரிஷ்மா சமூக வலைத்தளத்தில் இன்னும் எந்தப் பதிவும் பதிவிடவில்லை கரிஷ்மா.