நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சத்தீஸ்கர் மாநில அரசு திருமணமான பெண்களுக்கு மஹ்தாரி வந்தன் யோஜனா என்ற திட்டத்தின் அடிப்படையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த தொகை நடிகை சன்னி லியோனுக்கும் கொடுக்கப்பட்டு வரும் தகவல் வெளியானதை அடுத்து, திரைப்படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சன்னி லியோனுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டுமா? அதுவும் சன்னி லியோன் கனடா நாட்டைச் சேர்ந்தவர் . அவருக்கு எதற்காக சத்தீஸ்கர் மாநில அரசு உதவி தொகை வழங்குகிறது என்று சோசியல் மீடியாவில் அதற்கு எதிரான கருத்துக்கள் பதிவாகி வந்தன.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில அரசு அதிகாரிகள் இதை ஆராய தொடங்கினர். அப்போதுதான் நடிகை சன்னி லியோனின் பெயரில் வீரேந்திர ஜோஷி என்ற நபர் 1000 ரூபாய் உதவி தொகையை பெற்று வருவது தெரியவந்துள்ளது. அதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டு, எந்தெந்த அதிகாரிகள் மூலமாக இப்படி இன்னொருவரின் பெயரில் அவர் உதவி தொகை பெற்று வருகிறார் என்பது குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .