கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
பாலிவுட்டில் அடுத்ததாக மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் படங்கள் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ்கன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சிங்கம் அகைன் மற்றும் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெற்றி பெற்ற நிலையில் கார்த்திக் ஆர்யன், வித்யா பாலன், மாதுரி தீட்சித் ஆகியோர் நடிப்பில் மூன்றாவது பாகமாக வெளியாகும் பூல் புலையா-3 ஆகியவை தான். இந்த இரண்டு படங்களும் இன்று நவம்பர் 1ம் தேதி வெளியாக இருக்கின்றன. அதேசமயம் இந்த இரண்டு படங்களும் அரபு நாடுகளின் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் சிங்கம் அகைன் திரைப்படம் ராமாயணம் சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகளையும், இஸ்லாமிய மதம் குறித்த சில சர்ச்சை கருத்துக்களையும் கூறியிருப்பதாக கருதி அந்த படத்தை வெளியிட தடை விதித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல பூல் புலையா-3 திரைப்படம் அரபு நாடுகளில் மிகவும் எதிர்க்கப்படுகின்ற, தடை செய்யப்பட்ட ஓரினச்சேர்க்கை விவகாரத்தை உள்ளடக்கியதாக இருப்பதால் அந்த படமும் அரபு மற்றும் வளைகுடா நாடுகளில் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
இதைத் தாண்டி தங்கள் படங்களில் இந்த விஷயங்களை சரி செய்து அரபு நாடுகளில் இந்த படத்தை வெளியிடும் முயற்சிகளை மேற்கண்ட படக்குழுவினர் மேற்கொண்டுள்ளார்களா என்பது பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை.