பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

பாலிவுட்டில் அடுத்ததாக மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் படங்கள் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ்கன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சிங்கம் அகைன் மற்றும் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெற்றி பெற்ற நிலையில் கார்த்திக் ஆர்யன், வித்யா பாலன், மாதுரி தீட்சித் ஆகியோர் நடிப்பில் மூன்றாவது பாகமாக வெளியாகும் பூல் புலையா-3 ஆகியவை தான். இந்த இரண்டு படங்களும் இன்று நவம்பர் 1ம் தேதி வெளியாக இருக்கின்றன. அதேசமயம் இந்த இரண்டு படங்களும் அரபு நாடுகளின் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் சிங்கம் அகைன் திரைப்படம் ராமாயணம் சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகளையும், இஸ்லாமிய மதம் குறித்த சில சர்ச்சை கருத்துக்களையும் கூறியிருப்பதாக கருதி அந்த படத்தை வெளியிட தடை விதித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல பூல் புலையா-3 திரைப்படம் அரபு நாடுகளில் மிகவும் எதிர்க்கப்படுகின்ற, தடை செய்யப்பட்ட ஓரினச்சேர்க்கை விவகாரத்தை உள்ளடக்கியதாக இருப்பதால் அந்த படமும் அரபு மற்றும் வளைகுடா நாடுகளில் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
இதைத் தாண்டி தங்கள் படங்களில் இந்த விஷயங்களை சரி செய்து அரபு நாடுகளில் இந்த படத்தை வெளியிடும் முயற்சிகளை மேற்கண்ட படக்குழுவினர் மேற்கொண்டுள்ளார்களா என்பது பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை.