விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

பாலிவுட்டில் அடுத்ததாக மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் படங்கள் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ்கன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சிங்கம் அகைன் மற்றும் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெற்றி பெற்ற நிலையில் கார்த்திக் ஆர்யன், வித்யா பாலன், மாதுரி தீட்சித் ஆகியோர் நடிப்பில் மூன்றாவது பாகமாக வெளியாகும் பூல் புலையா-3 ஆகியவை தான். இந்த இரண்டு படங்களும் இன்று நவம்பர் 1ம் தேதி வெளியாக இருக்கின்றன. அதேசமயம் இந்த இரண்டு படங்களும் அரபு நாடுகளின் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் சிங்கம் அகைன் திரைப்படம் ராமாயணம் சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகளையும், இஸ்லாமிய மதம் குறித்த சில சர்ச்சை கருத்துக்களையும் கூறியிருப்பதாக கருதி அந்த படத்தை வெளியிட தடை விதித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல பூல் புலையா-3 திரைப்படம் அரபு நாடுகளில் மிகவும் எதிர்க்கப்படுகின்ற, தடை செய்யப்பட்ட ஓரினச்சேர்க்கை விவகாரத்தை உள்ளடக்கியதாக இருப்பதால் அந்த படமும் அரபு மற்றும் வளைகுடா நாடுகளில் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
இதைத் தாண்டி தங்கள் படங்களில் இந்த விஷயங்களை சரி செய்து அரபு நாடுகளில் இந்த படத்தை வெளியிடும் முயற்சிகளை மேற்கண்ட படக்குழுவினர் மேற்கொண்டுள்ளார்களா என்பது பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை.
 
           
             
           
             
           
             
           
            