நிஜ வாழ்க்கையில் நான் அப்படி இருக்க தவறிவிட்டேன் : சமந்தா வருத்தம் | 5 கோடி பார்வையாளர்களைக் கடந்த ‛கோல்டன் ஸ்பாரோ' பாடல் | விஜய் 69 பட கதை தொடர்பாக வெளியான தகவல் | காலை 6.34 மணிக்கே சர்தார் 2 படப்பிடிப்புக்கு சென்ற மாளவிகா மோகனன்! | என் வெற்றிக்கு காரணம் அஜித் தான் : யுவன் | பிளாஷ்பேக் : மதுவின் தீமையை விளக்கிச் சொன்ன மகத்துவமிக்க கவிஞன் 'கவியரசர்' கண்ணதாசன் | ‛பார்க்கிங்' பட இயக்குனர் உடன் இணையும் சிவகார்த்திகேயன் | ஜெயம் ரவி 34வது படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் | 4வது திருமணம் செய்த நடிகர் பாலா: முறைப்பெண்ணை மணந்தார் | ‛ஸ்டார்' படத்தில் நான் சொன்னது தான் நடந்தது - கவின் ஓபன் டாக் |
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் ஏக்தா கபூர். பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா, ஷோபா கபூர் ஆகியோரின் மகள். பாலாஜி டெலி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனராகவும், கிரியேட்டிவ் ஹெட் ஆகவும் உள்ளார். அந்நிறுவனத்திற்குச் சொந்தமாக 'ஆல்ட் பாலாஜி' என்ற ஓடிடி நிறுவனமும் உள்ளது. 2020ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் வென்றவர்.
'ஆல்ட் பாலாஜி' ஓடிடி தளத்தில் 2021ம் ஆண்டில் ஏக்தா கபூர், ஷோபா கபூர் ஆகியோரது தயாரிப்பில் 'காந்தி பாட்டி' என்ற 'அடல்ட்' நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அதில் மைனர் நடிகையின் ஆபாசமான சில காட்சிகள் இடம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் ஏக்தா, ஷோபா ஆகியோர் மீது போக்சோ உள்ளிட்ட சில பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த ஒடிடி தளத்தில் 'காந்தி பாட்' ஷோ இடம் பெறவில்லை. பெண் தயாரிப்பாளர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தற்போது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.