சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
பிரபல டிவி மற்றும் ஹிந்தி நடிகை ஏக்தா ஜெயின். ‛காளி பாலி, ஜிந்தகி ஷத்ரஞ்ச் ஹே' போன்ற படங்களிலும், பேமிலி நம்பர் 1, ஷாகுன் உள்ளிட்ட டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். நாடு முழுவதும் நவராத்திரி விழா களைகட்டி வரும் வேளையில் நடிகை ஏக்தா ஜெயின், துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை ஒரே நாளில் பிரதிபலித்தார்.
துர்கா தேவியின் வெவ்வேறு வடிவங்களை சித்தரித்து, ஒவ்வொரு தேவி வடிவத்தின் சாரத்தையும் கம்பீரத்தையும் பிரதிபலித்தார். ஏக்தாவின் இந்த தனித்துவமான முயற்சியில் உடல் உழைப்பு மற்றும் கலையை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் ஆன்மிக அனுபவமாகவும் மாற்றினார்.
ஏக்தா கூறுகையில், ‛‛நான் துர்கா தேவியின் ஒவ்வொரு வடிவத்தையும் ஆய்வு செய்து, செய்ததில் மகிழ்ச்சி. ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒரு தனித்துவமான கதை மற்றும் பெருமை உள்ளது. மேலும் அவை அனைத்தும் ஒரே மாதிரியாக பகலில் வழங்குவது சவாலான விஷயம் என்றாலும் எனக்கு திருப்திகரமான அனுபவமாக இருந்தது.
நவராத்திரியின் போது கர்பா விளையாடுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்த விழா எனது இதயத்திற்கு நெருக்கமானது, இந்த அனுபவத்திற்குப் பிறகு இந்த ஆண்டு கொண்டாட்டம் இன்னும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது'' என்றார்.