'தக் லைப்' முடித்துவிட்டு 'ஏஐ' படிக்கச் சென்ற கமல்ஹாசன் | படே மியான் சோட்டே மியான் - இயக்குனர் மீது தயாரிப்பாகர்கள் புகார் | கார்த்தி, 'மெய்யழகன்' குழுவினருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | என்னை டபுள் ஆக்க முயற்சிக்க வேண்டாம் ; ஐஸ்வர்ய லட்சுமி | லப்பர் பந்துவை பாராட்டிய கிரிக்கெட் வீரர் அஸ்வின் | ரேணுகா சுவாமி கொலை வழக்கில் 3 பேருக்கு ஜாமின் ; தர்ஷனின் ஜாமீன் மனு செப்.,27க்கு தள்ளிவைப்பு | சூப்பர் ஸ்டாரை சந்தித்த புகழ் | இட்லி கடையில் நான் இல்லை ; தெளிவுபடுத்திய அசோக் செல்வன் | பிக்பாஸுக்கு போகவில்லை ஆனால்? ஜெகன் வெளியிட்ட நக்கல் பதிவு | சின்னத்திரை நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி! |
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று பூஜா என்டர்டெயின்மென்ட். இந்நிறுவனத்தின் தயாரிப்பில், அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், அக்ஷய்குமார், டைகர் ஷராப், பிருத்விராஜ், மனுஷி சில்லர் மற்றும் பலர் நடிப்பில் இந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் வெளியான படம் 'படே மியான் சோட்டே மியான்'. சுமார் 300 கோடிக்கும் அதிகமான செலவில் தயாரான இந்தப் படம் படுதோல்வியடைந்தது. வெறும் 100 கோடியை மட்டுமே வசூலித்தது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்களான வாஷு பக்னானி, ஜாக்கி பக்னானி படத்தின் இயக்குனரான அலி அப்பாஸ் ஜாபர் மீது மும்பை, பாந்த்ரா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். படத்திற்காக அபுதாபியில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து பெற்ற சுமார் 9 கோடி ரூபாய் தொகையை அலி அப்பாஸ் தனது சொந்தப் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொண்டதாக அப்புகாரில் குறிப்பிட்டுள்ளார்களாம்.
அதே சமயம் தனக்கு சம்பளமாகத் தர வேண்டிய 7 கோடி ரூபாயை தயாரிப்பு நிறுவனம் இதுவரையிலும் தரவில்லை என அலி அப்பாஸ் சொன்னதாக பாலிவுட் வட்டாரங்களில் தெவிக்கிறார்கள். இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்திய சினிமா ஊழியர்களின் மேற்கு கூட்டமைப்பு தயாரிப்பாளர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிகிறது. ஆனால், அதை தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளதாம்.
இந்த விவகாரம் தற்போது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாக்கி பக்னானி பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கணவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.