மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவின் தந்தை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பிரபல ஹிந்தி நடிகை மலைக்கா அரோரா. மாடலிங் செய்து, டிவியில் பணியாற்றி பின்னர் சினிமாவிற்கு வந்தார். மணிரத்னம் இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்த ‛தில் சே' (உயிரே) படத்தில் வரும் தைய்ய தைய்யா பாடலுக்கு நடனம் ஆடி பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் பணியாற்றி உள்ளார்.
இவரது தந்தை அனில் அரோரா. இந்திய கப்பல் படையில் வேலை பார்த்தவர். மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். சமீபகாலமாக இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது வீட்டின் 6வது மாடியிலிருந்து அனில் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். மும்பை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மலைக்கா அரோரா 11 வயதாக இருக்கும் போதே அவரது தந்தையும், அம்மாவும் பிரிந்துவிட்டனர். மலைக்கா, அவரது சகோதரி அம்ரிதா ஆகியோர் தாயார் உடன் வசித்து வந்தனர். தந்தை இறந்த செய்தி கேள்விப்பட்டு புனேவில் இருந்து மும்பைக்கு விரைந்து வந்தார் மலைக்கா. மலைக்காவின் முன்னாள் கணவரும், நடிகருமான அர்பாஸ் கான், அனில் அரோரா இறந்த செய்தி அறிந்து அவரது வீட்டிற்கு வந்தார்.
அனில் அரோராவின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. ஆனால் அவரின் மறைவு குடும்பத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.