இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

பாலிவுட் நடிகையான மீதா வசிஷ்த் என்பவர் தெலுங்கு இயக்குனர் ஒருவர் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி தன்னை படுக்கைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
ஷாருக்கான் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய தில் சே(தமிழில் உயிரே) திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தீவிரவாதியாக நடித்திருந்த இவர் தமிழில் வெளியான சிநேகிதியே படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்தார். தொடர்ந்து மராத்தி, பெங்காலி படங்களில் நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் தொலைக்காட்சி தொடர்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் மீதா வசிஷ்த். சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் இந்த மீடூ விவாகாரம் குறித்து பேசியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “பல வருடங்களுக்கு முன்பு ஒரு தெலுங்கு பட இயக்குனர் அவரது படத்தில் எனக்கு வாய்ப்பு தருவதாக கூறி அது குறித்து பேசுவதற்காக ஹோட்டலில் தன்னுடைய அறைக்கு வர சொன்னார். அவரது அறைக்கு அருகிலேயே உள்ள பக்கத்து அறையில் தான் என்னுடைய நண்பர்கள் இருந்தனர். நான் மட்டும் சென்று இயக்குனரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் என்னுடைய படத்தில் உனக்கு வாய்ப்பு தருகிறேன் ஆனால் நீ என்னுடன் இரண்டு மாதம் தங்க வேண்டும் என்று கூறினார். எனக்கு ஆரம்பத்தில் அவர் கூறியது சரியாக புரியவில்லை. ஒருவேளை அவர் கூறிய ஆங்கிலத்தை நாம் தான் தவறாக புரிந்து கொண்டோமோ என்று நினைத்து மீண்டும் அவர் என்ன சொல்கிறார் என கேட்டபோது தான் இரண்டு மாதங்கள் அவருடன் தனியாக வசிக்க வேண்டும் என்று கூறினார்.
எனக்கு உங்கள் பட வாய்ப்பே வேண்டாம் என்று கூறி அங்கிருந்து வெளியேற முயற்சிக்கும்போது வாசலில் நின்று கொண்டு என்னை போக விடாமல் வலுக்கட்டாயமாக தடுத்தார். ஆனால் என்னுடைய சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த என்னுடைய நண்பர்கள் உடனடியாக அங்கே வந்ததால் அந்த இயக்குனரிடம் இருந்து தப்பித்தேன். அந்த சமயத்தில் அவர் இயக்கிய படம் தேசிய விருதும் பெற்றிருந்தது” என்று கூறியுள்ள மீதா வசிஷ்த் அந்த இயக்குனரின் பெயரை குறிப்பிட மறுத்துவிட்டார்.