இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
90களில் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரவீனா டாண்டன். தமிழில் 'சாது, ஆளவந்தான்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் அவரைப் பற்றிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவை வெளியிட்ட மோசின் ஷேக் என்பவர் மீது 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு ரவீனா டாண்டன் சார்பில் வக்கீல் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
“தன்னை பத்திரிகையாளராக சொல்லிக் கொள்ளும் அந்த நபர் எக்ஸ் தளத்தில் சமீபத்தில் போலி வீடியோ ஒன்றைப் பரப்பியிருந்தார். அது தவறானது, ஏமாற்றுவது. ஜூன் 1ம் தேதி மும்பையில் ரவீனா வீட்டிற்கு வெளியே நடந்த ஒரு சம்பவத்தில் அவரது வாகனம் அங்கிருந்த சில பெண்களை பாதித்ததாகவும், தன்னைச் சுற்றியிருந்த கூட்டத்தை விலக்குவதற்கு அவர் முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சிசிடிவி ஆதாரங்களில் அவரது வாகனம் பெண்கள் மீது மோதியதையோ அல்லது ரவீனா குடிபோதையில் இருந்ததையோ காட்டவில்லை,” என்று ரவீனாவின் வக்கீல் தெரிவித்தார்.