'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

90களில் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரவீனா டாண்டன். தமிழில் 'சாது, ஆளவந்தான்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் அவரைப் பற்றிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவை வெளியிட்ட மோசின் ஷேக் என்பவர் மீது 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு ரவீனா டாண்டன் சார்பில் வக்கீல் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
“தன்னை பத்திரிகையாளராக சொல்லிக் கொள்ளும் அந்த நபர் எக்ஸ் தளத்தில் சமீபத்தில் போலி வீடியோ ஒன்றைப் பரப்பியிருந்தார். அது தவறானது, ஏமாற்றுவது. ஜூன் 1ம் தேதி மும்பையில் ரவீனா வீட்டிற்கு வெளியே நடந்த ஒரு சம்பவத்தில் அவரது வாகனம் அங்கிருந்த சில பெண்களை பாதித்ததாகவும், தன்னைச் சுற்றியிருந்த கூட்டத்தை விலக்குவதற்கு அவர் முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சிசிடிவி ஆதாரங்களில் அவரது வாகனம் பெண்கள் மீது மோதியதையோ அல்லது ரவீனா குடிபோதையில் இருந்ததையோ காட்டவில்லை,” என்று ரவீனாவின் வக்கீல் தெரிவித்தார்.