சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
சண்டிகர் விமான நிலையத்தில் நடிகையும், மாண்டி தொகுதியில் எம்.பி. ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கங்கனா ரணாவத்தை ஒரு பெண் சிஐஎஸ்எப் அதிகாரி கன்னத்தில் அறைந்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் தான் நலமாக உள்ளதாக கங்கனா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தான் தாக்கப்பட்டது குறித்து எந்த ஒரு கண்டனத்தையும் தெரிவிக்காத பாலிவுட் மீது கங்கனா தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் ஒரு பதிவிட்டிருந்தார். ஆனால், அதை பின்னர் டெலிட் செய்துவிட்டார். இருந்தாலும் அவரது பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்திருந்த பலர் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.
கங்கனா தாக்கப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. இயக்குனர் ராம்கோபால் வர்மா மட்டுமே கங்கனா தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பதிவு செய்துள்ளார்.