25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
கொடுமையான வெயில் காரணமாக 'ஹீட் ஸ்ட்ரோக்' என்கிற வெப்ப வாத பிரச்சினை பலருக்கும் ஏற்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஷாருக்கான் ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளில் ஒன்றான கோல்கட்டா அணியின் உரிமையாளராக உள்ளார். நேற்று முன்தினம் கோல்கட்டா அணிக்கும், ஐதராபாத் அணிக்கும் இடையே ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை தனது மகள் சுகானா மற்றும் மகன் அப்ராம் ஆகியோருடன் பார்த்தார். இந்த போட்டியில் கோல்கட்டா அணி வெற்றி பெற்றது. இந்த உற்சாகத்தால் ஷாருக்கான் மற்றும் அவரது மகன், மகள் 3 பேரும் ஸ்டேடியத்தை சுற்றி வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் தனது மகளின் பிறந்தநாளையும் அந்த வெற்றியுடன் சேர்த்து கொண்டாடினார்.
இந்த நிலையில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆமதாபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நீர்சத்து குறைந்து அவர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். கடுமையான வெயில் தாக்கம் காரணமாக அவர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. சில நாள் சிகிச்சைக்கு பிறகு ஷாருக்கான் மும்பை திரும்புவார் என்று கூறப்படுகிறது.