விஜய் உடன் லிப்டில் எடுத்த ‛மிரர் செல்பி': போட்டோ பகிர்ந்து வாழ்த்திய திரிஷா | விவசாயி என்ற வார்த்தையே பவர்புல்: ‛உழவர்களின் தோழன்' விருது பெற்ற சிவகார்த்திகேயன் | ஜூன் 25ல் வெளியாகிறது ‛இந்தியன்-2' டிரைலர் | பிடிகொடுக்காமல் நழுவும் பாணா காத்தாடி | மகனுக்காக பைனான்ஸ் உதவி செய்யும் அப்பா நடிகர் | சூர்யா 44 படத்தில் இணைந்த மலையாள நடிகர்! | டி.என்.ஏ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | இளையராஜாவிடம் கற்றுக்கொண்டவை: கார்த்திக் ராஜா சிறப்பு பேட்டி | புறக்கணிப்புகளை புறந்தள்ளி சாதிக்கும் சவுந்தர்யா நஞ்சுந்தன் | தெலுங்கிலும் லாபத்தைக் கொடுத்த 'மகாராஜா' |
கொடுமையான வெயில் காரணமாக 'ஹீட் ஸ்ட்ரோக்' என்கிற வெப்ப வாத பிரச்சினை பலருக்கும் ஏற்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஷாருக்கான் ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளில் ஒன்றான கோல்கட்டா அணியின் உரிமையாளராக உள்ளார். நேற்று முன்தினம் கோல்கட்டா அணிக்கும், ஐதராபாத் அணிக்கும் இடையே ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை தனது மகள் சுகானா மற்றும் மகன் அப்ராம் ஆகியோருடன் பார்த்தார். இந்த போட்டியில் கோல்கட்டா அணி வெற்றி பெற்றது. இந்த உற்சாகத்தால் ஷாருக்கான் மற்றும் அவரது மகன், மகள் 3 பேரும் ஸ்டேடியத்தை சுற்றி வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் தனது மகளின் பிறந்தநாளையும் அந்த வெற்றியுடன் சேர்த்து கொண்டாடினார்.
இந்த நிலையில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆமதாபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நீர்சத்து குறைந்து அவர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். கடுமையான வெயில் தாக்கம் காரணமாக அவர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. சில நாள் சிகிச்சைக்கு பிறகு ஷாருக்கான் மும்பை திரும்புவார் என்று கூறப்படுகிறது.