மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

கொடுமையான வெயில் காரணமாக 'ஹீட் ஸ்ட்ரோக்' என்கிற வெப்ப வாத பிரச்சினை பலருக்கும் ஏற்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஷாருக்கான் ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளில் ஒன்றான கோல்கட்டா அணியின் உரிமையாளராக உள்ளார். நேற்று முன்தினம் கோல்கட்டா அணிக்கும், ஐதராபாத் அணிக்கும் இடையே ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை தனது மகள் சுகானா மற்றும் மகன் அப்ராம் ஆகியோருடன் பார்த்தார். இந்த போட்டியில் கோல்கட்டா அணி வெற்றி பெற்றது. இந்த உற்சாகத்தால் ஷாருக்கான் மற்றும் அவரது மகன், மகள் 3 பேரும் ஸ்டேடியத்தை சுற்றி வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் தனது மகளின் பிறந்தநாளையும் அந்த வெற்றியுடன் சேர்த்து கொண்டாடினார்.
இந்த நிலையில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆமதாபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நீர்சத்து குறைந்து அவர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். கடுமையான வெயில் தாக்கம் காரணமாக அவர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. சில நாள் சிகிச்சைக்கு பிறகு ஷாருக்கான் மும்பை திரும்புவார் என்று கூறப்படுகிறது.