'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தெலுங்குத் திரையுலகத்தை வட இந்தியா வரை கொண்டு சென்றவர் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர். அவருக்கு சொந்தமான தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் 'பாகுபலி 1, பாகுலி 2' ஆகிய படங்களை வட இந்தியாவில் வினியோகம் செய்து அந்தப் படங்களை பிரம்மாண்ட வெற்றி பெற வைத்தது.
சுமார் ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிரம்மாண்ட தெலுங்குப் படமான 'தேவரா' படத்தை வட இந்தியாவில் வினியோகிக்க உள்ளது. ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிக்கும் இந்த தெலுங்குப் படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. ஏஏ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை வெளியிட உள்ளது கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ். அதன் காரணமாக 'தேவரா' படத்திற்கு வட இந்தியாவில் நிறைய தியேட்டர்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.