ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
பாலிவுட்டில் அக்சய் குமார் மற்றும் டைகர் ஷெராப் இருவரும் இணைந்து நடித்துள்ள 'படே மியான் சோட்டே மியான்' திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. டைகர் ஜிந்தகி படத்தை இயக்கிய அலி அப்பாஸ் ஜாபர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ராணுவ பின்னணியில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார் மலையாள நடிகர் பிரித்விராஜ். ஏற்கனவே ஹிந்தியில் மூன்று படங்களில் நடித்துள்ள பிரித்விராஜ் மூன்றிலுமே வில்லனாகத்தான் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான இதன் டிரைலரில் வித்தியாசமான இரும்பு முகமூடி அணிந்த ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதே சமயம் சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அக்சய் குமார், “படத்தின் ஹீரோக்களான எங்கள் இருவரை விட வில்லன் பிரித்விராஜூக்கு தான் பஞ்ச் வசனங்கள் அதிகம் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த படம் வெளியாகும் போது அவரது வசனங்கள் தான் ரசிகர்களிடம் பெரிய அளவில் பேசப்படும்” என்று பிரித்திவிராஜ் முன்னிலையிலேயே அவரை புகழ்ந்து தள்ளி விட்டார்.