நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி |
தற்போதெல்லாம் பணபுழக்கம் முடிந்து எல்லாமே ஆன்லைன் பரிவர்த்தனைகளாக மாறி வருகிறது. கடைகளில், பெட்ரோல் பங்குளில் உள்ளிட்ட எந்த இடத்திலும் ஸ்கேன் செய்து பணம் செலுத்தும்போது 'இத்தனை ரூபாய் பெறப்பட்டது' என்கிற குரல் ஒலிக்கும், பணத்தை பெறுபவர்கள் கவனத்திற்காக இந்த ஏற்பாடு. இதற்கான செயலிகள் ஏராளமாக வந்திருக்கிறது. அவைகளுக்கு இடையே வியாபார போட்டியும் இருக்கிறது. இவற்றை யுபிஐ செயலி என்று அழைக்கிறார்கள்.
இந்த நிலையில் ஒரு முன்னணி யுபிஐ செயலி ஒன்று பண பரிவர்த்தனைகள் பற்றி அறிவிக்க அமிதாப் பச்சனையும், தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவையும் அணுகியது. 'இவ்வளவு ரூபாய் பணம் பெறப்பட்டது' என்ற ஒரு வரியை பேச அமிதாப்பச்சனுக்கு 2 கோடியும், மகேஷ் பாபுவுக்கு 5 கோடியும் சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாக தவல்கள் வெளியாகி உள்ளது.