ஜனநாயகன்: வழக்கு போடாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ரவுடி பேபி' லிரிக் வீடியோ | விபீஷணனாக நடிக்கவில்லை ; விஜய்சேதுபதி திட்டவட்டம் | மோகன்லால் மம்முட்டிக்கு நான் வில்லன் தான் ; உறுதி செய்த பஹத் பாசில் | பிப்ரவரி 26ல் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம்? | அப்படி ஒன்றும் அவசியம் இல்லை ; ஓடிடி நிறுவனத்தை அதிர வைத்த 'சூ ப்ரம் சோ' தயாரிப்பாளர் | ஜனநாயகன் பட வழக்கை வாபஸ் பெற்றது தயாரிப்பு நிறுவனம் | டொவினோ தாமஸ் படத்தில் இணைந்த 'சர்வம் மாயா' நாயகி | பிளாஷ்பேக் ; ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பை மனதில் வைத்து பாக்யராஜ் புத்திசாலித்தனமாக செய்த காரியம் | 'பேட்ரியாட்' டப்பிங்கை நிறைவு செய்த மோகன்லால் |

தற்போதெல்லாம் பணபுழக்கம் முடிந்து எல்லாமே ஆன்லைன் பரிவர்த்தனைகளாக மாறி வருகிறது. கடைகளில், பெட்ரோல் பங்குளில் உள்ளிட்ட எந்த இடத்திலும் ஸ்கேன் செய்து பணம் செலுத்தும்போது 'இத்தனை ரூபாய் பெறப்பட்டது' என்கிற குரல் ஒலிக்கும், பணத்தை பெறுபவர்கள் கவனத்திற்காக இந்த ஏற்பாடு. இதற்கான செயலிகள் ஏராளமாக வந்திருக்கிறது. அவைகளுக்கு இடையே வியாபார போட்டியும் இருக்கிறது. இவற்றை யுபிஐ செயலி என்று அழைக்கிறார்கள்.
இந்த நிலையில் ஒரு முன்னணி யுபிஐ செயலி ஒன்று பண பரிவர்த்தனைகள் பற்றி அறிவிக்க அமிதாப் பச்சனையும், தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவையும் அணுகியது. 'இவ்வளவு ரூபாய் பணம் பெறப்பட்டது' என்ற ஒரு வரியை பேச அமிதாப்பச்சனுக்கு 2 கோடியும், மகேஷ் பாபுவுக்கு 5 கோடியும் சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாக தவல்கள் வெளியாகி உள்ளது.