'கைதி 2'க்கு முன்பாக உருவாகும் 'மார்ஷல்' | ‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? |
1990களில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர் பார்க்கா மதன். 'கிலாடியோன் கா கிலாடி' என்ற படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாக அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெற்றாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை. அதன் பிறகு, ராம் கோபால் வர்மா இயக்கத்தில் அவர் நடித்த 'பூட்' அவருக்கு ரீ -என்ட்ரி கொடுத்தது. 1857 கிராந்தி, கர் ஏக் சப்னா உள்பட பல படங்களில் நடித்தார்.
பல வருடங்கள் மாடலிங் துறையில் இருந்த பார்க்கா மதன் 1994ம் ஆண்டு நடைபெற்ற 'மிஸ் இந்தியா' போட்டியில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் சுஷ்மிதா சென் ஆகியோருடன் போட்டியிட்டார். இதில் சுஷ்மிதா சென் வெற்றி பெற்றார்.
கடந்த 2012ம் ஆண்டு இவர் நடிப்பை விட்டு விலகுவதாகவும் புத்த மதத்தைத் தழுவப் போவதாகவும் அறிவித்தார். அதன்பிறகு தலையை மொட்டை அடித்துக் கொண்டு ஒரு துறவியை போல வாழ்ந்தார். என்றாலும் தற்போது முறைப்படி புத்த துறவியாக மாறி இருக்கிறார். கர்நாடகாவில் உள்ள செரா ஜெய் மடாலயத்தின் ஹர்டாங் காங்செனில் புத்த துறவியாக ஆனார். தனது பெயரை வென் கைல்டென் சம்டென் எனவும் மாற்றினார்.