நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

1990களில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர் பார்க்கா மதன். 'கிலாடியோன் கா கிலாடி' என்ற படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாக அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெற்றாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை. அதன் பிறகு, ராம் கோபால் வர்மா இயக்கத்தில் அவர் நடித்த 'பூட்' அவருக்கு ரீ -என்ட்ரி கொடுத்தது. 1857 கிராந்தி, கர் ஏக் சப்னா உள்பட பல படங்களில் நடித்தார்.
பல வருடங்கள் மாடலிங் துறையில் இருந்த பார்க்கா மதன் 1994ம் ஆண்டு நடைபெற்ற 'மிஸ் இந்தியா' போட்டியில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் சுஷ்மிதா சென் ஆகியோருடன் போட்டியிட்டார். இதில் சுஷ்மிதா சென் வெற்றி பெற்றார்.
கடந்த 2012ம் ஆண்டு இவர் நடிப்பை விட்டு விலகுவதாகவும் புத்த மதத்தைத் தழுவப் போவதாகவும் அறிவித்தார். அதன்பிறகு தலையை மொட்டை அடித்துக் கொண்டு ஒரு துறவியை போல வாழ்ந்தார். என்றாலும் தற்போது முறைப்படி புத்த துறவியாக மாறி இருக்கிறார். கர்நாடகாவில் உள்ள செரா ஜெய் மடாலயத்தின் ஹர்டாங் காங்செனில் புத்த துறவியாக ஆனார். தனது பெயரை வென் கைல்டென் சம்டென் எனவும் மாற்றினார்.