இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. விளம்பர பரபரப்புக்காக அவ்வப்போது எதையாவது செய்வார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் செய்தது எல்லை மீறி தற்போது அவரை சிக்கலில் மாட்டி உள்ளது. கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பில் இறந்துவிட்டதாக பொய்யான தகவலை சமூக வலைத்தளத்தில் பரப்பி இறப்பு நாடகம் ஆடினார். விழிப்புணர்வுக்காகவே இப்படி செய்தேன் என்றார்.
இந்த நிலையில் மராட்டிய சட்டசபை மேலவை உறுப்பினர் சத்யஜீத் தாம்பே, பூனம் பாண்டே குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். கோல்கட்டாவை சேர்ந்த அமித் ராய் என்பவர் பூனம் பாண்டேவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். “பொதுமக்கள் இடையே தேவையற்ற பீதியையும், மன உளைச்சலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி இருப்பதால் உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்” என்று அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
பூனம் பாண்டே மீது வழக்கு தொடர்ந்தால் அவருக்கு சிறை தண்டனை கிடைக்கும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.