காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் |
தென்னிந்திய திரையுலகில் குறிப்பாக தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணியில் உள்ள நட்சத்திரங்கள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பதை விரும்புவதில்லை. காரணம் யாருக்கு முக்கியத்துவம் அதிகம் என்கிற எண்ணம் சம்பந்தப்பட்ட ஹீரோக்களுக்கு ஏற்படாவிட்டாலும் கூட அவர்களது ரசிகர்களுக்குள் மோதல் ஏற்படும் என்பதற்காக தவிர்த்து வருகிறார்கள். அதேசமயம் பாலிவுட்டில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் இப்படி மல்டி ஸ்டார் படங்களில் இணைந்து நடிப்பதை வரவேற்கவே செய்கிறார்கள்.
அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான பதான் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் எந்த ஈகோவும் பார்க்காமல் நடித்திருந்தார் சல்மான்கான். அப்படிப்பட்டவர்கள் ஒரு படத்தில் சம முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்க தயங்குவார்களா என்ன? அப்படி ஒரு படம் இவர்கள் இருவரது கூட்டணியில் விரைவில் உருவாக இருக்கிறது.
இந்த படத்திற்கு டைகர் வெர்சஸ் பதான் என டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளதாம்.. ஏற்கனவே சல்மான்கான் நடித்து ஹிட்டான டைகர் மற்றும் ஷாரூக்கான் நடிப்பில் ஹிட்டான பதான் என இரண்டு படங்களின் டைட்டிலையுமே இணைத்து மாஸ் டைட்டிலாக புதிய படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். பதான் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். வரும் மார்ச் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.
மலையாளத்தில் இதேபோன்று மம்முட்டி நடித்த 'தி கிங்' மற்றும் சுரேஷ்கோபி நடித்த 'கமிஷனர்' ஆகிய படங்களில் டைட்டில்களை இணைத்து 'தி கிங் அண்ட் கமிஷனர்' என்கிற பெயரில் உருவான படத்தில் மம்முட்டி, சுரேஷ்கோபி இருவருமே இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.