'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

தென்னிந்திய திரையுலகில் குறிப்பாக தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணியில் உள்ள நட்சத்திரங்கள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பதை விரும்புவதில்லை. காரணம் யாருக்கு முக்கியத்துவம் அதிகம் என்கிற எண்ணம் சம்பந்தப்பட்ட ஹீரோக்களுக்கு ஏற்படாவிட்டாலும் கூட அவர்களது ரசிகர்களுக்குள் மோதல் ஏற்படும் என்பதற்காக தவிர்த்து வருகிறார்கள். அதேசமயம் பாலிவுட்டில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் இப்படி மல்டி ஸ்டார் படங்களில் இணைந்து நடிப்பதை வரவேற்கவே செய்கிறார்கள்.
அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான பதான் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் எந்த ஈகோவும் பார்க்காமல் நடித்திருந்தார் சல்மான்கான். அப்படிப்பட்டவர்கள் ஒரு படத்தில் சம முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்க தயங்குவார்களா என்ன? அப்படி ஒரு படம் இவர்கள் இருவரது கூட்டணியில் விரைவில் உருவாக இருக்கிறது.
இந்த படத்திற்கு டைகர் வெர்சஸ் பதான் என டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளதாம்.. ஏற்கனவே சல்மான்கான் நடித்து ஹிட்டான டைகர் மற்றும் ஷாரூக்கான் நடிப்பில் ஹிட்டான பதான் என இரண்டு படங்களின் டைட்டிலையுமே இணைத்து மாஸ் டைட்டிலாக புதிய படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். பதான் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். வரும் மார்ச் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.
மலையாளத்தில் இதேபோன்று மம்முட்டி நடித்த 'தி கிங்' மற்றும் சுரேஷ்கோபி நடித்த 'கமிஷனர்' ஆகிய படங்களில் டைட்டில்களை இணைத்து 'தி கிங் அண்ட் கமிஷனர்' என்கிற பெயரில் உருவான படத்தில் மம்முட்டி, சுரேஷ்கோபி இருவருமே இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




