2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

பாலிவுட் நடிகை ரேகாவின் வாழ்க்கை வரலாற்றை 'தி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற பெயரில் பிரபல எழுத்தாளர் யாசிர் உஸ்மான் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் ரேகா தனது பெண் செயலாளர் பர்சானாவுடன் லெஸ்பியன் உறவில் இருந்ததாகவும், அவர் இல்லாமல் ரேகாவால் ஒரு நிமிடம்கூட தனியாக இருக்க முடியாது என்றும், ரோகாவின் கணவர் முகேஷ் அகர்வாலின் தற்கொலைக்கு பர்சானாவும் காரணம் என்றும், ரேகா பல முன்னணி நடிகர்களிடன் தனிப்பட்ட உறவில் இருந்தாகவும் அந்த புத்தகத்தில் தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக செய்திகள் வெளியானது.
இதனை எழுத்தாளர் யாசிர் உஸ்மான் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: ரேகா குறித்த நான் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் பெண் செயலாளருடன், அவர் தொடர்பில் இருந்ததாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தகவல்கள் பொய்யானவை. பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படி தவறான கருத்துகளை எந்தவித ஆதாரமும் இல்லாமல் வெளியிடுகிறார்கள். இதனை முற்றிலும் மறுக்கிறேன். அப்படி எந்த ஒரு தகவலும் புத்தகத்தில் இல்லை. என்று குறிப்பிட்டுள்ளார்.