சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | 'பரிசு' திரைப்படம் கல்லூரி மாணவிகளுக்காக சிறப்பு திரையீடு! | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் | முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் | திலீப்பின் கல்யாணராமன் படத்தை 23 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யும் நடிகர் லால் | தமிழ் இயக்குனர்களின் சாதியப் படங்கள் : துருவ் விக்ரம் விளக்கம் | காந்தாரா வராஹரூபம் பாடலுக்கு நடனம் ஆடிய பார்வதி ஜெயராம் |
பாலிவுட் நடிகை ரேகாவின் வாழ்க்கை வரலாற்றை 'தி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற பெயரில் பிரபல எழுத்தாளர் யாசிர் உஸ்மான் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் ரேகா தனது பெண் செயலாளர் பர்சானாவுடன் லெஸ்பியன் உறவில் இருந்ததாகவும், அவர் இல்லாமல் ரேகாவால் ஒரு நிமிடம்கூட தனியாக இருக்க முடியாது என்றும், ரோகாவின் கணவர் முகேஷ் அகர்வாலின் தற்கொலைக்கு பர்சானாவும் காரணம் என்றும், ரேகா பல முன்னணி நடிகர்களிடன் தனிப்பட்ட உறவில் இருந்தாகவும் அந்த புத்தகத்தில் தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக செய்திகள் வெளியானது.
இதனை எழுத்தாளர் யாசிர் உஸ்மான் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: ரேகா குறித்த நான் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் பெண் செயலாளருடன், அவர் தொடர்பில் இருந்ததாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தகவல்கள் பொய்யானவை. பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படி தவறான கருத்துகளை எந்தவித ஆதாரமும் இல்லாமல் வெளியிடுகிறார்கள். இதனை முற்றிலும் மறுக்கிறேன். அப்படி எந்த ஒரு தகவலும் புத்தகத்தில் இல்லை. என்று குறிப்பிட்டுள்ளார்.