நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
பாலிவுட் நடிகை ரேகாவின் வாழ்க்கை வரலாற்றை 'தி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற பெயரில் பிரபல எழுத்தாளர் யாசிர் உஸ்மான் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் ரேகா தனது பெண் செயலாளர் பர்சானாவுடன் லெஸ்பியன் உறவில் இருந்ததாகவும், அவர் இல்லாமல் ரேகாவால் ஒரு நிமிடம்கூட தனியாக இருக்க முடியாது என்றும், ரோகாவின் கணவர் முகேஷ் அகர்வாலின் தற்கொலைக்கு பர்சானாவும் காரணம் என்றும், ரேகா பல முன்னணி நடிகர்களிடன் தனிப்பட்ட உறவில் இருந்தாகவும் அந்த புத்தகத்தில் தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக செய்திகள் வெளியானது.
இதனை எழுத்தாளர் யாசிர் உஸ்மான் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: ரேகா குறித்த நான் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் பெண் செயலாளருடன், அவர் தொடர்பில் இருந்ததாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தகவல்கள் பொய்யானவை. பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படி தவறான கருத்துகளை எந்தவித ஆதாரமும் இல்லாமல் வெளியிடுகிறார்கள். இதனை முற்றிலும் மறுக்கிறேன். அப்படி எந்த ஒரு தகவலும் புத்தகத்தில் இல்லை. என்று குறிப்பிட்டுள்ளார்.