இன்னும் 4 வாரம் தேவை: ஜனநாயகன் சென்சார் வழக்கில் தணிக்கை வாரியம் வாதம் | சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது | 22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி | கடைசியாக நடித்த படத்தில் நள்ளிரவு 2 மணிக்கு நடனமாடிய தர்மேந்திரா | இங்கு மட்டுமல்ல சவுதியிலும் 'ஜனநாயகன்' வெளியாவதில் சென்சார் சிக்கல் | தமிழில் கவனம் செலுத்தும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ் | சிரஞ்சீவி பட இயக்குனருக்கு மோகன்லால் கொடுத்த அதிர்ச்சி | சிவகார்த்திகேயன் திரையிலும், நிஜத்திலும் என் சகோதரர் : அதர்வா நெகிழ்ச்சி | 'ஹேப்பி ராஜ்' படப்பிடிப்பு நிறைவு | 'ஜனநாயகன்' தணிக்கை தாதமம், காரணம் என்ன ? |

மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இப்படிப்பட்ட படங்களைத்தான் இவர் இயக்குவார் என ஒரு வட்டத்துக்குள் தன்னை அடைத்துக் கொள்ளாமல் மோகன்லால் நடித்த உதயநாணுதாரம், பிரித்விராஜ் நடித்த மும்பை போலீஸ், நிவின்பாலி நடித்த வரலாற்று படமான காயங்குளம் கொச்சுண்ணி மற்றும் மலையாளத்தில் மஞ்சு வாரியருக்கும், தமிழில் ஜோதிகாவுக்கும் வெற்றிகரமான மறு பிரவேசத்துக்கு வழிவகுத்த ஹவ் ஓல்ட் ஆர் யூ (தமிழில் 36 வயதினிலே) என விதவிதமான ஜானர்களில் படங்களை இவர் இயக்கி உள்ளார்.
இந்தநிலையில் மலையாளம் தமிழ், இரண்டு மொழிகளையும் தாண்டி முதன்முறையாக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ். இந்தியில் அவர் இயக்கும் படத்தில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடித்து வருகிறார். கதாநாயகியாக பூஜா ஹெட்டே நடிக்கிறார். இதற்கு முன்பு ஷாகித் கபூர் நடிப்பில் வெளியான பிளடி டாடி என்கிற படம் வெற்றி படமாக அமைந்தது. அந்த படத்திற்கு 40 கோடி சம்பளம் வாங்கி இருந்தாராம் ஷாகித் கபூர்.
ஆனால் தற்போது ரோஷன் ஆண்ட்ரூஸ் படத்திற்காக 15 கோடி குறைத்துக் கொண்டு வெறும் 25 கோடி மட்டுமே சம்பளமாக பெற்றுக் கொண்டாராம் ஷாகித். அதற்கு காரணம் இது குறுகிய கால தயாரிப்பாக உருவாவதாலும் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் மீது ஷாகித் கொண்டிருந்த மரியாதையாலும் தான் என்கிறார்கள் பாலிவுட் வட்டாரத்தில்.




