ரஜினிகாந்துடன் ஆஸ்திரேலியா நாட்டு தூதர் சந்திப்பு | லாவண்யா - வருண் தேஜ் திருமணம் இத்தாலி நாட்டில் ? | என் கண்ணீரை துடைத்தார், என்னை தாங்கி நின்றார் : காதலரின் போட்டோவை பகிர்ந்து இலியானா நெகிழ்ச்சி | 'விடுதலை 2' : மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பம் ? | மீண்டும் தள்ளிப் போகும் வாடிவாசல் | சத்தமில்லாமல் புதிய படத்தில் நடித்து வரும் கவின் | பாலகிருஷ்ணாவின் 109வது படத்தின் அறிவிப்பு வெளியானது | வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு : சின்மயி போன்று தைரியமாக வெளியே சொல்லணும் - பாடகி புவனா சேஷன் | நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி | பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ் |
கோல்கட்டாவில் உள்ள கர்தா பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஷிவானிக்கு நேற்று முன்தினம் செல்போனில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. போனில் வீடியோ காலில் பேசியவர் ஷாருக்கான். ஷிவானி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விழிப்பில் இருக்கிறார். தான் மரணமடைவதற்குள் ஷாருக்கானை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று உள்ளூர் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ஷாருக்கானின் கவனத்துக்கு செல்ல, அவரே வீடியோகாலில் அழைத்து ஷிவானியுடன் பேசினார். அதோடு ஷிவானியின் மருத்துவ செலவையும் ஏற்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இது தொடர்பாக ஷிவானியின் மகள் ப்ரியா கூறும்போது, “என் தாயார் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக ஷாருக்கான் தெரிவித்தார். மேலும், அவர் என்னுடைய திருமணத்திற்கு வருவதாகவும், கோல்கட்டாவில் உள்ள வீட்டிற்கு நேரில் வருவதாகவும் கூறினார்". என்றார்.