'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
கோல்கட்டாவில் உள்ள கர்தா பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஷிவானிக்கு நேற்று முன்தினம் செல்போனில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. போனில் வீடியோ காலில் பேசியவர் ஷாருக்கான். ஷிவானி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விழிப்பில் இருக்கிறார். தான் மரணமடைவதற்குள் ஷாருக்கானை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று உள்ளூர் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ஷாருக்கானின் கவனத்துக்கு செல்ல, அவரே வீடியோகாலில் அழைத்து ஷிவானியுடன் பேசினார். அதோடு ஷிவானியின் மருத்துவ செலவையும் ஏற்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இது தொடர்பாக ஷிவானியின் மகள் ப்ரியா கூறும்போது, “என் தாயார் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக ஷாருக்கான் தெரிவித்தார். மேலும், அவர் என்னுடைய திருமணத்திற்கு வருவதாகவும், கோல்கட்டாவில் உள்ள வீட்டிற்கு நேரில் வருவதாகவும் கூறினார்". என்றார்.