அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் | பாலிவுட் என்று அழைக்காதீர்கள் : ஜெயா பச்சன் காட்டம் | சர்ச்சையை ஏற்படுத்திய 'இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார்' | ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் |

பெங்களூரை சேர்ந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மும்பை திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மோசடிகளுக்கு உடந்தையாக இருந்தாக அவரது காதலியும், நடிகையுமான ஜாக்குலின் பெர்ணாண்டசும் விசாரணை வளையத்திற்குள் உள்ளார். இநத நிலையில் இலங்கையை சேர்ந்த பெண்ணான ஜாக்குலினுக்கு சிறையில் இருந்தபடியே ஈஸ்டர் வாழ்த்து சொல்லி காதல் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார் சுகேஷ்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: என் செல்லக் குழந்தை ஜாக்குலின். குட்டி முயலே... எனது பேபியே... உனக்கு எனது இனிய ஈஸ்டர் தின நல்வாழ்த்துகள். உனக்கு மிகவும் பிடித்த பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகையும் ஒன்று என தெரியும். இந்த பூமியில் உன்னை விடவும் அழகி யாருமே கிடையாது. ஐ லவ் யூ பேபி.
இந்த நேரமும் கடந்து போகும். மீண்டும் நல்ல நாட்கள் வரும். ஒவ்வொரு கணமும் உன்னை மிஸ் செய்கிறேன். ஒவ்வொரு கணமும் நீயும் என்னை மிஸ் செய்வாய் என்று எனக்கு தெரியும். அடுத்த ஆண்டு ஈஸ்டர் தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். என்று எழுதியுள்ளார்.