இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
ஹிந்தி, தெலுங்கு, தமிழ், ஹாலிவுட் ஆகிய மொழி படங்களில் நடித்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "ஹிந்தி சினிமா மாபியாக்கள் கையில் உள்ளது. அவர்கள் என்னை ஓரம் கட்டினர் என்றும், அந்த அரசியலை தாக்குப்பிடிக்க முடியாமல் தான் நான் ஹாலிவுட்டுக்கு சென்றுவிட்டேன்'' என்றும் கருத்து தெரிவித்தார். இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இத்தனை நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது எதற்காக பிரியங்கா சோப்ரா இவ்வாறு பேசினார் என இணையதள வாசிகள் கேள்விகள் எழுப்பினர்.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக பிரியங்கா சோப்ரா கூறியது, "ஒரு நிகழ்ச்சியில் எனது சினிமா வாழ்க்கை பயணம் பற்றி கேட்டனர். இதனால் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் வெளிப்படையாக தெரிவித்தேன். ஹிந்தி பட உலக மாபியா கும்பல் பற்றிய உண்மையை சொன்னேன். நான் எதிர்கொண்ட அந்த வலிகளை பற்றி பேச எனக்கு இப்போதுதான் தைரியம் வந்துள்ளது. நான் அனுபவித்த கஷ்டங்களை தைரியமாக இந்த உலகிற்கு சொல்கிற நிலையில் இன்று நான் இருக்கிறேன்'' என கூறியுள்ளார்.