ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
ஹிந்தி, தெலுங்கு, தமிழ், ஹாலிவுட் ஆகிய மொழி படங்களில் நடித்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "ஹிந்தி சினிமா மாபியாக்கள் கையில் உள்ளது. அவர்கள் என்னை ஓரம் கட்டினர் என்றும், அந்த அரசியலை தாக்குப்பிடிக்க முடியாமல் தான் நான் ஹாலிவுட்டுக்கு சென்றுவிட்டேன்'' என்றும் கருத்து தெரிவித்தார். இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இத்தனை நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது எதற்காக பிரியங்கா சோப்ரா இவ்வாறு பேசினார் என இணையதள வாசிகள் கேள்விகள் எழுப்பினர்.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக பிரியங்கா சோப்ரா கூறியது, "ஒரு நிகழ்ச்சியில் எனது சினிமா வாழ்க்கை பயணம் பற்றி கேட்டனர். இதனால் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் வெளிப்படையாக தெரிவித்தேன். ஹிந்தி பட உலக மாபியா கும்பல் பற்றிய உண்மையை சொன்னேன். நான் எதிர்கொண்ட அந்த வலிகளை பற்றி பேச எனக்கு இப்போதுதான் தைரியம் வந்துள்ளது. நான் அனுபவித்த கஷ்டங்களை தைரியமாக இந்த உலகிற்கு சொல்கிற நிலையில் இன்று நான் இருக்கிறேன்'' என கூறியுள்ளார்.