ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
ஹிந்தி, தெலுங்கு, தமிழ், ஹாலிவுட் ஆகிய மொழி படங்களில் நடித்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "ஹிந்தி சினிமா மாபியாக்கள் கையில் உள்ளது. அவர்கள் என்னை ஓரம் கட்டினர் என்றும், அந்த அரசியலை தாக்குப்பிடிக்க முடியாமல் தான் நான் ஹாலிவுட்டுக்கு சென்றுவிட்டேன்'' என்றும் கருத்து தெரிவித்தார். இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இத்தனை நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது எதற்காக பிரியங்கா சோப்ரா இவ்வாறு பேசினார் என இணையதள வாசிகள் கேள்விகள் எழுப்பினர்.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக பிரியங்கா சோப்ரா கூறியது, "ஒரு நிகழ்ச்சியில் எனது சினிமா வாழ்க்கை பயணம் பற்றி கேட்டனர். இதனால் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் வெளிப்படையாக தெரிவித்தேன். ஹிந்தி பட உலக மாபியா கும்பல் பற்றிய உண்மையை சொன்னேன். நான் எதிர்கொண்ட அந்த வலிகளை பற்றி பேச எனக்கு இப்போதுதான் தைரியம் வந்துள்ளது. நான் அனுபவித்த கஷ்டங்களை தைரியமாக இந்த உலகிற்கு சொல்கிற நிலையில் இன்று நான் இருக்கிறேன்'' என கூறியுள்ளார்.