அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
பிரபல பாலிவுட் காமெடி நடிகர் கியாலி சஹாரன். 'சிங் இஸ் எ கிங்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பிசியாக இருப்பவர். அதோடு பல சமூக சேவைகளும் செய்து வருகிறவர். இவர் மீது தற்போது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
25 வயது இளம் பெண் ஒருவர் ராஜஸ்தானின் மானசரோவர் போலீஸ் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்துள்ள புகார் மனுவில் நடிகர் கியாலி சஹாரன் வேலை வாங்கித் தருவதாக இரண்டு பெண்களை ஓட்டலுக்கு அழைத்ததாகவும், அந்த ஓட்டலில் அழைக்கப்பட்ட பெண்களுக்கு தனித்தனி அறை எடுத்து கொடுத்து அங்கு இன்டர்வியூ என்ற பெயரில் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும், அதில் ஒரு பெண் தப்பி ஓடிவிட்டதாகவும், மாட்டிக் கொண்ட தான் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அந்த பெண் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதையடுத்து கியாலி சஹாரன் மீது போலீசார் பாலியல் பலாத்கார பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கியாலி சஹாரன் கைதாகலாம் என்று தெரிகிறது.