‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
பாலிவுட் நடிகையான சன்னி லியோனுக்கு கேரளாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சில படங்களில் நடித்தும், ஆடியும் இருக்கிறார். இதனால் கேரளாவில் நடக்கும் கடை திறப்பு விழாக்களில், நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். இதற்கான கணிசமான தொகையை பெற்றுக் கொள்ளவார்.
அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்பந்தம் செய்து இருந்ததாகவும் ஆனால் அதில் அவர் பங்கேற்காமல் மோசடி செய்து விட்டதாகவும் ஷியாஸ் குஞ்சு முகமது என்பவர் மாநில குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக சன்னி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தனக்கு எதிராக போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி சன்னிலியோன் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது “மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை. எனவே வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய இருக்கிறது. எனவே சரியான ஆதாரங்களை மனுதாரர் சமர்ப்பிக்காவிட்டால் சன்னிலியோனை மனுதாரர் தரப்பு துன்புறுத்துகிறது என்று பொருள். இதனால் அவர் கிரிமினல் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று நீதிமன்றம் முடிவு செய்யும்” என்று கூறி வழக்கை வருகிற 31ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.