பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
மத்திய பிரசேத மாநிலம் போபாலை சேர்ந்தவர் சிம்லா பிரசாத். 2010ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான இவர் தற்போது அந்த மாநிலத்திலேயே பணியாற்றி வருகிறார். இவரது தாயார் மெஹ்ருன்னிஷா ஒரு எழுத்தாளர், தந்தை பகீரத் பிரசாத் முன்னாள் போலீஸ் அதிகாரி. நடிப்பு, நடனத்தில் ஆர்வம் கொண்ட சிம்லா தந்தையின் விருப்பதிற்காக ஐபிஎஸ் முடித்தார். தற்போது போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார்.
'அலிப்' படத்தில் ஷம்மி என்ற கேரக்டரில் நடித்தார். 2017ம் ஆண்டு அந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. பின்னர் 2019ம் ஆண்டில் வெளியான 'நாகாஷ்' என்ற படத்தில் பத்திரிக்கையாளராக நடித்திருந்தார். இவர் கூறுகையில் ''எனக்கு சிறு வயதில் இருந்தே நடனம் மற்றும் நடிப்பு மீது விருப்பம் இருந்தது. சிவில் சர்வீசஸ் பணியில் சேர வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. அந்த தேர்வை எழுதுவேன் என்று ஒருபோதும் நினைத்ததும் இல்லை. ஆனால் எனது வீட்டின் சூழ்நிலைதான் ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்ற விருப்பத்தை எனக்குள் விதைத்தது. தற்போது எனக்குள் இருக்கும் கலை ஆர்வத்தை நிறைவு செய்யும் வகையில் சிறப்பு அனுமதி பெற்று நடித்து வருகிறேன்”. என்கிறார்.