விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' |
மத்திய பிரசேத மாநிலம் போபாலை சேர்ந்தவர் சிம்லா பிரசாத். 2010ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான இவர் தற்போது அந்த மாநிலத்திலேயே பணியாற்றி வருகிறார். இவரது தாயார் மெஹ்ருன்னிஷா ஒரு எழுத்தாளர், தந்தை பகீரத் பிரசாத் முன்னாள் போலீஸ் அதிகாரி. நடிப்பு, நடனத்தில் ஆர்வம் கொண்ட சிம்லா தந்தையின் விருப்பதிற்காக ஐபிஎஸ் முடித்தார். தற்போது போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார்.
'அலிப்' படத்தில் ஷம்மி என்ற கேரக்டரில் நடித்தார். 2017ம் ஆண்டு அந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. பின்னர் 2019ம் ஆண்டில் வெளியான 'நாகாஷ்' என்ற படத்தில் பத்திரிக்கையாளராக நடித்திருந்தார். இவர் கூறுகையில் ''எனக்கு சிறு வயதில் இருந்தே நடனம் மற்றும் நடிப்பு மீது விருப்பம் இருந்தது. சிவில் சர்வீசஸ் பணியில் சேர வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. அந்த தேர்வை எழுதுவேன் என்று ஒருபோதும் நினைத்ததும் இல்லை. ஆனால் எனது வீட்டின் சூழ்நிலைதான் ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்ற விருப்பத்தை எனக்குள் விதைத்தது. தற்போது எனக்குள் இருக்கும் கலை ஆர்வத்தை நிறைவு செய்யும் வகையில் சிறப்பு அனுமதி பெற்று நடித்து வருகிறேன்”. என்கிறார்.