சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் வீட்டை இரண்டு புகைப்பட கலைஞர்கள் அருகில் உள்ள வீட்டில் இருந்து ரகசியமாக படம் எடுத்துள்ளனர். இதை ஆலியா பட் கவனித்து விட்டார். பின்னர் அவர்கள் எடுத்த படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள அவர் இதுகுறித்து எழுதியிருப்பதாவது:
எனது வீட்டின் அறையில் நான் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். யாரோ என்னை பார்ப்பதை உணர்ந்தேன். அப்போது, எதிர் வீட்டின் மேல்மாடியை பார்த்த போது, அங்கு நின்றிருந்த இரண்டு நபர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இதுபோன்ற செயல்களால் எனது தனி உரிமை பாதிக்கப்படுகிறது.
எந்த உலகில் இதுபோன்ற செயல்கள் அனுமதிக்கப்படுகிறது. ஒருவரின் தனியுரிமை மீதான அத்துமீறல்கள் அதன் எல்லைக் கோடுகளை கடந்துவிட்டன. என எழுதியிருந்தார். அதோடு இந்த பதிவை மும்பை போலீசுக்கு டேக் செய்திருந்தார்.
ஆலியாவின் இந்த பதிவு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலரும் ஆலியாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டு வருகிறார்கள். அனுஷ்கா சர்மா, நீது கபூர், ஜான்வி கபூர், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் ஆலியாவுக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.