ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் வீட்டை இரண்டு புகைப்பட கலைஞர்கள் அருகில் உள்ள வீட்டில் இருந்து ரகசியமாக படம் எடுத்துள்ளனர். இதை ஆலியா பட் கவனித்து விட்டார். பின்னர் அவர்கள் எடுத்த படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள அவர் இதுகுறித்து எழுதியிருப்பதாவது:
எனது வீட்டின் அறையில் நான் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். யாரோ என்னை பார்ப்பதை உணர்ந்தேன். அப்போது, எதிர் வீட்டின் மேல்மாடியை பார்த்த போது, அங்கு நின்றிருந்த இரண்டு நபர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இதுபோன்ற செயல்களால் எனது தனி உரிமை பாதிக்கப்படுகிறது.
எந்த உலகில் இதுபோன்ற செயல்கள் அனுமதிக்கப்படுகிறது. ஒருவரின் தனியுரிமை மீதான அத்துமீறல்கள் அதன் எல்லைக் கோடுகளை கடந்துவிட்டன. என எழுதியிருந்தார். அதோடு இந்த பதிவை மும்பை போலீசுக்கு டேக் செய்திருந்தார்.
ஆலியாவின் இந்த பதிவு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலரும் ஆலியாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டு வருகிறார்கள். அனுஷ்கா சர்மா, நீது கபூர், ஜான்வி கபூர், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் ஆலியாவுக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.