நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் வீட்டை இரண்டு புகைப்பட கலைஞர்கள் அருகில் உள்ள வீட்டில் இருந்து ரகசியமாக படம் எடுத்துள்ளனர். இதை ஆலியா பட் கவனித்து விட்டார். பின்னர் அவர்கள் எடுத்த படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள அவர் இதுகுறித்து எழுதியிருப்பதாவது:
எனது வீட்டின் அறையில் நான் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். யாரோ என்னை பார்ப்பதை உணர்ந்தேன். அப்போது, எதிர் வீட்டின் மேல்மாடியை பார்த்த போது, அங்கு நின்றிருந்த இரண்டு நபர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இதுபோன்ற செயல்களால் எனது தனி உரிமை பாதிக்கப்படுகிறது.
எந்த உலகில் இதுபோன்ற செயல்கள் அனுமதிக்கப்படுகிறது. ஒருவரின் தனியுரிமை மீதான அத்துமீறல்கள் அதன் எல்லைக் கோடுகளை கடந்துவிட்டன. என எழுதியிருந்தார். அதோடு இந்த பதிவை மும்பை போலீசுக்கு டேக் செய்திருந்தார்.
ஆலியாவின் இந்த பதிவு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலரும் ஆலியாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டு வருகிறார்கள். அனுஷ்கா சர்மா, நீது கபூர், ஜான்வி கபூர், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் ஆலியாவுக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.