25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சல்மான்கானுடன் இணைந்து ஒன்றாக சுற்றி வந்ததால் பரபரப்பாக பேசப்பட்டவர். அதைத்தொடர்ந்து சமீபகாலமாக மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். சுகேஷிடம் இருந்து கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த நகைகள் பரிசுப்பொருட்களை பெற்றுள்ளதாக அவர் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் நடிகை ஜாக்குலின் பஹ்ரைனுக்கு செல்ல வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஜாக்குலின் பெர்னாண்டஸ், நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது நீதிபதி அவரிடம் இந்த மனுவை நீங்களே வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நாங்கள் இந்த மனுவின் மீது நீதிமன்ற உத்தரவை பிறப்பிக்க நேரிடும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த ஜாக்குலின் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதால் அவர் ஊர் சென்றால் இங்கே திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.