விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சல்மான்கானுடன் இணைந்து ஒன்றாக சுற்றி வந்ததால் பரபரப்பாக பேசப்பட்டவர். அதைத்தொடர்ந்து சமீபகாலமாக மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். சுகேஷிடம் இருந்து கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த நகைகள் பரிசுப்பொருட்களை பெற்றுள்ளதாக அவர் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் நடிகை ஜாக்குலின் பஹ்ரைனுக்கு செல்ல வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஜாக்குலின் பெர்னாண்டஸ், நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது நீதிபதி அவரிடம் இந்த மனுவை நீங்களே வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நாங்கள் இந்த மனுவின் மீது நீதிமன்ற உத்தரவை பிறப்பிக்க நேரிடும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த ஜாக்குலின் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதால் அவர் ஊர் சென்றால் இங்கே திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.