25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் தலைவராக செயல்பட்டவர் லலித் மோடி. அதன்பிறகு சில ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்து அங்கு லலித் வசித்து வருகிறார். அவ்வப்போது ஏதாவது ஒரு செய்தியில் அவரது பெயர் இடம் பெறும்.
கடந்த ஜுலை மாதம் அவர் தனது சமூக வலைத்தளத்தில் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென்னுடன் 'புதிய வாழ்க்கை' ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் சுஷ்மிதா சென் பற்றி தன்னுடைய புரொபைலில் குறிப்பிட்டிருந்ததை தற்போது நீக்கியுள்ளார். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. சுஷ்மிதா கடந்த வாரம் அவரது முன்னாள் ஆண் நண்பரான ரோஹ்மான் ஷால் உடன் சுற்றியதே அதற்குக் காரணம் என பாலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
இருப்பினும் இன்ஸ்டா தளத்தில் சுஷ்மிதா உடன் உள்ள புகைப்படங்களை லலித் நீக்கவில்லை.