நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

தென்னிந்தியத் திரைப்படங்கள் பான்-இந்தியா படங்களாக வெளியாகி ஹிந்தியிலும் வசூல் சாதனையைப் புரிந்தன. 'புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' ஆகிய படங்களி ஹிந்தியில் பெரிய வசூலைப் பெற்றன. அதே சமயம் சில முக்கியமான நேரடி ஹிந்திப் படங்கள் அங்கு தோல்வியைத் தழுவின. அது தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இது குறித்து நடிகர் ஆமீர்கானிடம் சமீபத்தில் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆமீர், “மோசமான படங்கள், ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத படங்கள் வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதை வரலாற்றைப் பார்த்தாலே தெரியும். அதுதான் நடந்துள்ளது. 'புஷ்பா, த காஷ்மீர் பைல்ஸ், கங்குபாய் கத்தியவாடி, பூல் புலையா 2' ஆகிய படங்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டன. அதனால், அவை பாக்ஸ் ஆபீசிலும் வசூலை அள்ளின,” என்று தெரிவித்துள்ளார்.
ஆமீர்கான் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' படம் அடுத்த வாரம் பான் இந்தியா படமாக வெளிவர உள்ளது. இதற்கு முன்பு பல வெற்றிப் படங்களைக் கொடுத்த ஆமீர்கானின் இந்தப் படம் எப்படி வரவேற்பைப் பெறப் போகிறது என்பது குறித்து பாலிவுட்டினர் கூட மிகவும் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.