மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக பணியாற்றி வருகிறார். உலகம் முழுக்க நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். தற்போது கணவர் நிக் ஜோன்ஸ் உடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
உக்ரைன் போரினால் இடம் பெயர்ந்துள்ள அகதிகளுக்கு உலக தலைவர்கள் உதவ வேண்டும் என்று ஏற்கெனவே குரல் கொடுத்த பிரியாங்கா சோப்ரா, அதற்கான நன்கொடையும் திரட்டி வந்தார். இந்த நிலையில் போலந்தில் தங்கி உள்ள உக்ரைன் அகதிகளை நேரில் சென்று சந்தித்தார். அகதி முகாமில் உள்ள குழந்தைகளோடு மகிழ்ச்சியோடு உரையாடினார். அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.