இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், லண்டனில் தலைமறைவாக வாழும் மோசடி தொழில் அதிபர் லலித் மோடியுடன் லிவிங் டூ கெதராக வாழ்வதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்யலாம் என்று தகவல்கள் வெளியானது. இந்த தகவலை வெளியிட்டதே லலித் மோடிதான்.
இந்த தகவல் வெளியானதும் சமூக வலைத்தளத்தில் சுஷ்மிதான சென்னை கிழித்து தொங்க விட்டார்கள். பணத்துக்காக எதையும் செய்வீர்களா? என்பது பிரதான கேள்வியாக இருந்தது. இந்த நிலையில் சுஷ்மிதா சென் கோபமான பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் மகிழ்ச்சியான ஓர் இடத்தில் இருக்கிறேன். யாரையும் நான் திருமணம் செய்யவில்லை. திருமணத்தின் அடையாளமாக எனது விரல்களில் எந்த மோதிரமும் இல்லை. என்னைச் சுற்றி அளவற்ற அன்பு சூழ்ந்துள்ளது அவ்வளவே. தற்போது மீண்டும் எனது வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டேன். இதை தெளிவாகக் கூறிக்கொள்கிறேன். இவ்வாறு எழுதியிருக்கும் சுஷ்மிதா, இந்த பதிவோடு தன் குழந்தைகளோடு இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார்.