‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கடந்த 2003ல் பாலிவுட்டில் சஞ்சய் தத் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் தான் முன்னாபாய் எம்.பி.பி.எஸ். அந்த சமயத்தில் சர்ச்சைகளில் சிக்கி சரிந்து கிடந்த சஞ்சய் தத்தின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய இந்தப்படத்தை பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கினார்.. இந்தப்படம் தமிழில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், தெலுங்கில் சங்கர்தாதா எம்.பி.பி.எஸ், கன்னடத்தில் உப்பிதாதா எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் ரீமேக்காகி அங்கும் பெரும் வெற்றியைப் பெற்றது அனைவரும் அறிந்த வரலாறு..
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் 2வது பாகமாக லஹே ரகோ முன்னாபாய் படத்தை இயக்கினார் ராஜ்குமார் ஹிரானி. இந்தப்படமும் முதல் பாகத்தை போலவே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதுடன் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்து அங்கேயும் பெரும் வெற்றி பெற்றது.
கடந்த பத்து வருடங்கலுக்கு மேலாக முன்னாபாய் படத்தின் மூன்றாம் பாகம் எப்போது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு கூட இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, முன்னாபாய்' படத்தின் மூன்றாம் பாக வேலைகளை துவங்கிவிட்டதாக அறிவித்தார்.. ஆனால் அது அறிவிப்பாகவே நிற்கிறது.
இந்த நிலையில் அந்த இரண்டு பாகங்களிலும் சஞ்சய் தத்தின் வலதுகையாக (தமிழில் பிரபு நடித்திருந்தார்) கூடவே பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் அர்ஷத் வர்ஷி முன்னாபாய் மூன்றாம் பாகத்துக்கு இனி வாய்ப்பில்லை என்று ஒரு அதிர்ச்சி தகவலை கூறி உள்ளார்.. எல்லோரையும் போல படத்தில் நடித்த தானும் மற்ற சில முக்கிய நடிகர்களும் பத்து வருடங்களுக்கு மேலாக மூன்றாம் பாகத்திற்காக எதிர்பார்த்து சோர்ந்துபோய் விட்டதாகவும் இனிமேலும் மூன்றாம் பாகம் நிகழ வாய்ப்பில்லை என்றும் சமீபத்திய பெட்டி ஒன்றில் கூறியுள்ளார்..