சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

தாங்கள் ஹீரோவாக நடிக்கும் படங்களில் கதாநாயகிக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இருப்பதை பல ஹீரோக்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் பாலிவுட் நடிகரான அர்ஜூன் ராம்பால் இந்த விஷயத்தில் ரொம்பவே மாறுபட்ட சிந்தனை கொண்டவராக இருக்கிறார். இவர் பெண்களை மையப்படுத்தி, கதாநாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகும் படங்களில் நடிப்பதற்கு அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறார். இது ஆச்சரியமான விஷயம் தான் என்றாலும் இதற்கு பின்னணியில் நெகிழவைக்கும் ஒரு காரணமும் இருக்கிறது.
இதுபற்றி அர்ஜூன் ராம்பால் கூறும்போது, “இப்படி பெண்களை மையப்படுத்தி வெளியாகும் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தால் அதை உடனே ஏற்றுக் கொள்கிறேன். அதை என்னுடைய தாய்க்கு செலுத்தும் காணிக்கையாக தருகிறேன். தந்தை இல்லாத நிலையில் தனி ஒரு ஆளாக நின்று என்னை வளர்த்து ஆக்கியவர் என் தாய்” என்று கூறியுள்ளார். இவரது தாய் புற்றுநோய் காரணமாக கடந்த 2018 ல் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.