பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

2018ல் அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு வாடகை தாய் மூலம் ஒரு குழந்தை பிறந்தது. இந்த குழந்தை 28 வாரங்கள் கலிபோர்னியாவில் உள்ள மருத்துமனையில் மருத்துவர்களின் காண்காணிப்பில் இருந்து வந்தது. இப்படி பராமரிக்கப்பட்டு வந்த அந்த குழந்தையை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோன்ஸிடம் ஒப்படைக்கப்பட்டு, குழந்தையுடன் வீடு திரும்பி இருக்கிறார். இதனையடுத்து தனது குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ளார் .
அதோடு, ‛‛கடந்த சில மாதங்களாக கடினமான நேரங்களில் நாங்கள் பயணித்தோம். 100 நாட்களுக்கு மேல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த எங்கள் குழந்தை இப்போது வீட்டிற்கு வந்தது மகிழ்ச்சி. எங்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி'' என உருக்கமாக தெரிவித்துள்ளார் பிரியங்கா.