பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், சிவாஜியை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பிய ஏ வி எம் | திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் |

பிரபல ஹிந்தி தொலைக்காட்சி தொடர் நடிகை சாவி மித்தல். பத்மினி, நாகின், ஏ சடுக்கி அஸ்மான், டுவிங்கிள் பியூட்டி பார்லர், கிருஷ்ரீணதாசி என்கிற துளசி உள்பட ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சாவி மித்தல் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், அன்புள்ள மார்பகமே, இது உனக்கான பாராட்டு பதிவு. முதல்முறை உன்னை பார்த்தபோது அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது. என் குழந்தைகளுக்கு நீ பால் கொடுக்கும்போது உனது முக்கியத்துவத்தை உணர்ந்தேன். ஆனால், இன்று நான் மார்பக புற்றுநோயுடன் போராடுகிறேன்.
புற்றுநோயுடன் போராடுவது சாதாரண விஷயம் அல்ல. அதற்காக என் மனதை சோர்வடைய செய்ய மாட்டேன். எளிதாகவும் இருக்கக்கூடாது, கடினமாகவும் இருக்கக்கூடாது. மார்பக புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு என் வாழ்த்துகள். உங்களிடம் இருந்து நான் உத்வேகம் பெறுகிறேன். ஆனால், அது உங்களுக்கு தெரியாது. இக்கட்டான இந்த நேரத்தில் நலம் விசாரித்தவர்களுக்கு நன்றி. என்று எழுதியுள்ளார்.




