நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், ரஜினிகாந்த்துடன் பேட்ட படத்தில் வில்லனாக நடிதிருந்தார். இவரது தந்தை நவாபுதீன் சித்திக் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார். தந்தையின் மீது மிகுந்த பாசம் கொண்ட நவாசுதீன் சித்திக் அவரது பெயரில் மாளிகை ஒன்றை எழுப்ப விரும்பினார்.
உத்தர பிரதேச மாநிலம் புதானாவில் உள்ள தனது தந்தை வாழ்ந்த பாரம்பரிய வீட்டை போலவே பிரமாண்ட மாளிகை ஒன்றை கட்டினார். அவரது நேரடி பார்வையிலும் அவரது ஆலோசனைப்படியும் இந்த மாளிகை உருவானது. கடந்த 5 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த மாளிகை இப்போது திறக்கப்பட்டு விட்டது.
இதற்கு 'நவாப் பங்களா' என்ற பெயர் சூட்டி உள்ளார். தனது புதிய பங்களாவின் படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நவாசுதீன் "ஒரு நல்ல நடிகர் எப்போதும் கெட்ட மனிதனாக இருக்க முடியாது, ஏனென்றால் அவனது உள்ளதில் உள்ள தூய்மைதான் நல்ல நடிப்பை வெளிப்படுத்தும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.