ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கொரோனாவுக்கு பாலிவுட் பிரபலங்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் நடிகர், நடிகைகள் விழாக்கள், விருந்துகள், படப்பிடிப்புகள் என எப்போதும் ஒரு கூட்டத்துடனேயே இருக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்களை கொரோனா தொற்று எளிதாக தாக்குகிறது. இதற்காக அவர்களுக்கு கட்டுப்பாடுகளும் அதிகமாக இருக்கிறது. இதையும் சிலர் மீறிவிடுகிறார்கள்.
அலியா பட் நடித்து வரும் இந்தி படம் பிரம்மாஸ்த்ரா. டில்லியில் நடந்த இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் ஆலியாபட் மும்பையில் இருந்து சென்று கலந்து கொண்டார். சமீபத்தில் நடந்த பார்ட்டி ஒன்றில் ஆலியா பட்டும் பங்கேற்றிருந்தார். இதில் கலந்த கொண்ட நடிகை கரீனா உள்ளிட்ட ஒரு சிலருக்கு நோய் தொற்று உறுதியானதையடுத்து நடிகை ஆலியா பட்டும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. தனிமைப்படுத்துதல் விதியை மீறி அவர் மும்பையிலிருந்து டில்லி சென்றதாகவும், அவர் மீது சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் இதை மறுத்துள்ள மும்பை சுகாதாரத்துறை அதிகாரிகள், ஆலியா பட் தனிமைப்படுத்தப்படவில்லை, அவர் கொரோனா விதியை மீறவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் அவர் விமானத்தில் செல்வதற்கு முன்பாக அவர் கொரோனா பரிசோதனை செய்ததாகவும், அதில் அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.