எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வை துாண்டும் வகையில் பதிவு களை வெளியிடுவதாக கூறி, நடிகை கங்கனாவுக்கு டில்லி சட்டசபையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழு , சம்மன் அனுப்பியது.
தனது துணிச்சலான கருத்துக்களால் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறார் நடிகை கங்கனா ரணவத், அதே அளவிற்கு அவருக்கு எதிர்ப்புகளும் உருவாகி வருகிறது. அவரது கருத்துக்கள் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவான கருத்தாக பார்க்கப்படுவதால் எதிர்கட்சிகள் அவர் மீது குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் கங்கனா ரணவத் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டில்லியில் போராடிய சீக்கிய விவசாயிகளை அவர் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டதாக அவர் மீது டில்லி குருத்வாரா கமிட்டி போலீசில் புகார் அளித்தள்ளது. போலீசாரும் கங்கனா மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் டில்லியின் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி டில்லி சட்டசபையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழு கங்கனாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. சட்டசபையில் நேரில் ஆஜராகி தனது கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நடிகைக்கு சட்டசபையின் சம்மன் அனுப்புவது இதுவே முதல் முறை என்கிறார்கள்.