'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என கடந்த முப்பது வருட காலத்தில் தன்னை படிப்படியாக வளர்த்துக்கொண்டவர் தான் பிரபுதேவா. ஒரு கட்டத்தில் நடிப்புக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து விட்டு இயக்குனராக மாறி பாலிவுட்டின் முன்னணி நடிகர்களை வைத்து இயக்கும் அளவுக்கு முன்னேறினார். ஆனால் சமீப வருடங்களாக அடுத்தடுத்து இவர் இயக்கிய படங்கள் சற்றே சறுக்கவே, தனக்கு ஏற்கனவே கைகொடுத்த நடிகன் அவதாரத்திற்கு மீண்டும் மாறியுள்ளார் பிரபுதேவா.
கடந்த சில தினங்களுக்கு முன் அவர் நடித்த பொன் மாணிக்கவேல் படம் ஓடிடியில் வெளியானது. தேள், பகீரா, ஆகிய படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இந்தநிலையில் தற்போது ஜர்னி என்கிற படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கதாநாயகனாக அடியெடுத்து வைத்துள்ளார் பிரபுதேவா. இந்தப்படத்தை ஆஷிஷ் குமார் துபே என்பவர் இயக்குகிறார். 2022ல் துவங்கவுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆக்ரா மற்றும் ஐரோப்பாவில் நடைபெற உள்ளது.